கடல் மட்டத்திலிருந்து 1000 மீ உயரத்தில் மந்தாகினி ஆற்றின் கரையில் இந்த அகஸ்த்யமுனி எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அகஸ்திய முனிவர் பல வருடங்கள் தவம்புரிந்ததாக சொல்லப்படுகிறது.
இங்குள்ள கோயில் அகஸ்தேஷ்வர் மஹாதேவா கோயில் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் சுவர்களில் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோயிலில் நடத்தப்படும் பல்வேறு சந்தைத்திருவிழாக்களுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இவற்றில் பைசாகி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காகவே வெகு தூரத்திலிருந்தும் யாத்ரீகர்கள் இப்பகுதிக்கு விஜய்ம் செய்கின்றனர்.
மீன் பிடிப்பில் ஆர்வம் உள்ள சுற்றுலாப்பயணிகள் இங்கு மந்தாகினி ஆற்றில் இந்த பொழுதுபோக்கில் ஈடுபடலாம். கேதார்நாத் வரை இயக்கப்படும் பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் சேவைக்கான கேந்திரமாகவும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது.
பயணிகளுக்கான உணவகங்கள், வனத்துறை விருந்தினர் இல்லங்கள் மற்றும் தனியார் தங்குமிட வசதிகளும் இந்த அகஸ்த்யமுனி பகுதியில் அமைந்திருக்கின்றன.