சோன்பிரயாக் எனும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1829 மீ உயரத்தில் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் பாசுகி ஆறும் மந்தாகினி ஆறும் ஒன்றோடொன்று சங்கமிக்கின்றன.
கேதார்நாத்திற்கு செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக புகழ்பெற்றுள்ளது. இங்குள்ள ஆற்று நீர் புனிதத்தன்மை வாய்ந்ததாக நம்பப்படுவதே இதற்கு காரணம். ஐதீக நம்பிக்கைகளின்படி இந்த இடத்தில் ஓடும் ஆற்று நீரை தொட்டாலே வைகுண்ட மோட்சம் கிட்டும் என்பதாக நம்பப்படுகிறது.