சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த மலயாட்டூர் சர்ச் எனப்படும் கிறித்துவ தேவாலயமாகும். எல்லாக் காலங்களிலும், பருவங்களிலும் ஏராளமான யாத்ரீகர்கள் இந்த கிறித்துவ தேவாலயத்தை தரிசிக்க வருகை தருகின்றனர்.
ஸ்தல நம்பிக்கைகளின்படி யேசுவின் சீடராகிய ‘செயிண்ட் தாமஸ்’ இந்த மலைப்பகுதிக்கு கிறிஸ்துவின் போதனைகளை பரப்பும் நோக்குடன் விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்னி மேரிக்கான ஒரு சன்னதியையும் இந்த இடத்தில் ‘செயிண்ட் தாமஸ்’ நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.
தற்சமயம் உள்ள இந்த தேவாலயம் கிரிக்கோ-ரோமானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஏசு கிறிஸ்துவின் ஐந்து அற்புதங்கள் குறித்த ஓவியங்கள் மற்றும் சிற்பச் செதுக்கல்களை மலயாட்டூர் தேவாலயத்தின் சுவர்களில் பயணிகள் காணலாம்.
வருடாவருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மலயாட்டூர் பெருநாள் என்ற திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மர்த்தோமா மண்டபம், சன்னதி, கோல்டன் கிராஸ், அதிசய நீரூற்று போன்ற முக்கியமான அம்சங்கள் இந்த தேவாலயத்தில் பக்தர்கள் தவறாமல் பார்க்க வேண்டியவையாகும். கொச்சி நகரத்திலிருந்து 45கி.மீ தூரத்தில் இந்த மலயாட்டூர் சர்ச் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications