திரிக்கரா எனும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இந்த வாமனமூர்த்தி கோயில் திரிக்கரா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. எர்ணாகுளம் டவுன் பகுதியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த ஒரு விசாலமான பகுதியில் வீற்றுள்ள இந்தக்கோயில் விஷ்ணு பஹவானின் அவதாரமான வாமன கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை இக்கோயிலில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. புராணிக கதைகளின்படி, கேரள மன்னனாகிய மஹாபலி சொர்க்கத்தை ஆக்கிரமித்துவிடாமல் தடுப்பதற்காக விஷ்ணுக்கடவுளானவர் அம்மன்னனை பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அப்படி பாதாளம் சென்ற மஹாபலி மன்னன், ஒவ்வொரு வருடமும் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது பாதாளலோகத்திலிருந்து வருகை தந்து தன் குடிகளை தரிசிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.
இந்த ஓணம் புராணக்கதையுடன் சம்பந்தப்பட்டவர் வாமனக்கடவுள் என்பதால் இக்கோயிலில் ஓணம் பண்டிகை மிகச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஓணசதயா எனப்படும் விருந்து பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.



Click it and Unblock the Notifications