மிகச்சிறந்த தேசியவாதியும் சுதந்திரப்போராட்ட வீரருமான ஸ்ரீ குல்ஜாரிலால் நந்தா காந்தி, நேரு, படேல் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டராவார்.
சுதந்திர இந்தியாவின் தொழிலாளர் நல அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நேருவின் மரணத்திற்கு பின்பும், லால் பஹதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின்பும் இரு முறை தற்காலிக பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்ட பிறகு குருக்ஷேத்ராவை தனது இருப்பிடமாக கொண்டார். அச்சமயம் இந்த பகுதியிலிருந்த வழிபாட்டுத்தலங்களை செம்மைப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டார்.
குறிப்பாக பிரம்ம சரோவர் மற்றும் தானேசர் கோயில் ஆகியவை அவரது முயற்சிகளில் இடம் பெற்றிருந்தன. 1998ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அவர மறைந்தார். குருக்ஷேத்ராவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டினை ஞாபகப்படுத்தும் விதமாக ஹரியானா அரசாங்கம் இந்த அழகிய நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளது.