லோனாவலாவில் பிரசித்தமான வரலாற்றுச்சின்னம் இந்த மரஞ்சன் கோட்டையாகும். தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இது ஒரு காலத்தில் எதிரிகளால் தகர்க்க முடியாத வலிமை மிகுந்த கோட்டையாக திகழ்ந்திருக்கின்றது.
மரஞ்சன் மலைகள் சார்ந்த சமவெளிப்பகுதியை உயரத்திலிருந்து கண்காணிக்கும் ஒரு காவல் கோட்டையாக விளங்கியிருக்கிறது. இந்த வரலாற்றுச்சின்னத்தை புனரமைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தக்கோட்டை மீதிருந்து கண்கவரும் இயற்கைக்காட்சிகளை தரிசிக்க முடியும்.