இந்த ராஜமச்சி வனவிலங்கு சரணாலயம், எல்லாத்திசைகளிலும் அடர்ந்த காடுகள் சூழ அமைந்துள்ளது. லோனாவலா பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம் மேற்குமலைத்தொடர் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடரை ஒட்டி உள்ளது. வனவிலங்குகள் அவற்றின் இயற்கையான சூழலில் வாழும் இந்த சரணாலயம் காட்டுயிர் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இடமாய் உள்ளது.
ராட்சத இந்திய அணில் இங்கு பிரசித்தமாய் காணப்படுகிறது. பல அரிய தாவரங்களும், மூலிகைச்செடிகளும் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. காட்டு சிற்றுலா, மலைஏற்றம் மற்றும் பறவை வேடிக்கை போன்றவற்றுக்கு இந்த சரணாலயம் மிகவும் ஏற்றது.