மால்பே கடற்கரை அருகிலேயே அமைந்துள்ள இந்த வடபண்டேஸ்வரா கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. கிருஷ்ண பஹவானின் மூத்த சகோதரர் பலராமருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இது அனந்தீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் விக்கிரகம் ஷீ மத்வாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஹிந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு பௌர்ணமி தினம் மற்றும் அமாவாசை தினங்களில் வருகை தந்து வழிபாடு செய்து கடலிலும் புனித நீராடுகின்றனர்.
உடுப்பி நகரத்திலிருந்து மேற்காக 4 கி.மீ தூரத்தில் இந்த வடபண்டேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. உடுப்பியிலிருந்து சில நிமிட நேர பயணத்தில் இந்த கோயிலுக்கு வந்துவிடலாம். பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மூலம் உடுப்பியிலிருந்து கோயிலுக்கு வரலாம்.



Click it and Unblock the Notifications