நர்கு காட்டுயிர் சரணாலயம் மண்டி மாவட்டத்தில் உஹல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரோக் கிராமத்தை குல்லு சுற்றுலாத்தலத்துடன் இணைக்கும் மலையேற்றப்பாதை இந்த சரணாலயத்திற்கான முக்கிய பாதையாக பயன்படுகிறது.
மோனல் பறவை, ஹிமாலய கருப்பு கரடி, கருங்கரடி, குரைக்கும் மான், கஸ்தூரி மான், ஹிமாலய கருங்கரடி, பூனை, சிறுத்தை, செரோ எனும் மலைஆடு, காட்டுச்சேவல் மற்றும் ஹிமாலயன் புனுகுப்பூனை போன்றவை வசிக்கின்றன.
இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான தங்கும் இடங்கள் தல்டுகோட் மற்றும் சில்பத்வானி எனும் இடங்களில் அமைந்துள்ளன. ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான மாதங்கள் இந்த காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்ய உகந்தவையாக உள்ளன.