கடல் மட்டத்திலிருந்து 1350மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ரேவால்சார் ஏரி மண்டி பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலாத்தலமாகவும், யாத்திரைஸ்தலமாகவும் விளங்குகிறது.
மூன்று ஹிந்துக்கோயில்கள் மற்றும் மூன்று பௌத்த மடாலயங்களுக்காக இந்த ஏரி பிரசித்தி பெற்றுள்ளது. சீக்கிய இனத்தாரின் 10வது குருவான கோவிந்த சிங் இந்த பகுதியில் ஒரு மாத காலம் வசித்த காரணத்தால் இது சீக்கிய மக்களுக்கும் ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த ஸ்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள மடாலயங்கள் ட்ஸோ பேமா என்று புத்த மார்க்கத்தை சேர்ந்தவர்களால் அழைக்கப்படுகின்றன. இவை ஹிந்து கடவுள்களான கிருஷ்ணா மற்றும் சிவனுக்காகவும், லோமாஸ் எனப்படும் குருவிற்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புராணக்கதையின்படி, இந்த இடத்திலிருந்துதான் ‘குரு ரிம்போச்சே’ என்று அழைக்கப்பட்ட பத்மசாம்பவகுரு திபெத்திற்கு புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
மண்டியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரி 735மீ சுற்றளவை கொண்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத துவக்கத்தில் கொண்டாடப்படும் சிசு சந்தைத்திருவிழா மற்றும் பைசாகி திருவிழா ஆகிவற்றுக்கு ரேவால்சார் ஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த திருவிழாக்கள் ஏராளமான பக்தர்களை இந்த இடத்திற்கு கவர்ந்து இழுக்கின்றன.



Click it and Unblock the Notifications