லாப்ராங் மடாலயம் என்பதற்கு 'லாமாவின் இருப்பிடம்' என்று பொருளாகும். இது 1814-ல் க்யால்ஷே ரிக்ஸிங் கெம்பாவால் துவங்கப்பட்டு 1884-ல் கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திபெத்திய புத்தமதத்தின் நியிங்மாபா பிரிவின் கோட்பாடுகளை பின்பற்றி வந்தார்கள்.
திபெத்திலுள்ள கோங்புவின் லாட்சன் கெம்பா-விற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த மடாலயம் கட்டப்பட்டுள்ளது. இவர் சிக்கிமில் புத்தமதத்தை நிறுவியதற்காக அன்புடன் நினைவு கூறப்படுகிறார்.
வடக்கு சிக்கிம் நெடுஞ்சாலையில் உள்ள போடோங் மடாலயத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இந்த லாப்ராங் மடாலயம் அமைந்துள்ளது. சிக்கிமில் தீயினால் சிதைவுற்று கிடக்கும் பிற மடாலயங்களைப் போல் இல்லமல், இந்த மடாலயம் அதன் உண்மையான வடிவமைப்புடன் காணப்படுகிறது.
இந்த மடாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள முரல் சுவரோவியங்களில் பத்மசாம்வரின் ஓவியங்கள் 1022 பாவனைகளில் உள்ளன.
இந்த மடாலயத்தின் மாடிகளில் உள்ள ஒரு தலை வெட்டி எடுக்கப்பட்ட சிலைக்கு நெக்லெஸ் ஒன்றும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத துவக்கத்தில் நடக்கும் சாம் வகை ஆட்டங்களுக்காகவும் இந்த மடாலயம் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications