அரபிக் கடலின் அழகை ரசிக்க விரும்பும் பயணிகள் மரவந்தேவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடி கடற்கரைக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். கோடி என்றால் கன்னட மொழியில் கடற்கரை என்று அர்த்தம்.
இங்கு வரும் பயணிகள் கடலில் உல்லாசமாக நீந்துவது மற்றும் இதர பல நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம்.