ஒட்டினன்னே அதனுடைய செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலம். இங்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னணியில் பைந்தூர் ஆறு அரபிக் கடலில் கலக்கும் அற்புதக் காட்சியை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இதன் மழைக் காலங்களில் ஏராளமான அழகிய காட்டுப் பூக்கள் ஒட்டினன்னே முழுவதும் பூத்துக் குலுங்குவதால் பயணிகள் மழைக் காலத்தில் இங்கு வருவது பேரனுபவமாக இருக்கும்.