மௌண்ட் அபு மலை வாசஸ்தலத்தில் தில்வாரா கோயில்களுக்கு செல்லும் சாலையில் இந்த தட்தா சீ-வேர்ல்டு எனப்படும் ‘அக்வாரியம் (மீன் காட்சியகம்)’ அமைந்துள்ளது.இது இந்தியாவிலுள்ள பெரிய அக்வாரியங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.
பலவிதமான கடல் சங்குகள் மற்றும் மீன் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, கென்யா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகளையும் இங்கு பார்க்கலாம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட சங்கு மற்றும் சிப்பி வகைகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.