Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவின் மிகப்பெரிய வனவிலங்கு பாதை இந்தியாவில் தான் வரவிருக்கிறது – எங்கே என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஆசியாவின் மிகப்பெரிய வனவிலங்கு பாதை இந்தியாவில் தான் வரவிருக்கிறது – எங்கே என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள நாடுகள் நிலையான வாழ்க்கை முறையை நோக்கி நகர்கின்றன. இதேபோல், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான கூடுதல் வழிகளை அறிமுகப்படுத்த இந்தியாவும் முன்னேறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வேயில் நாட்டின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய உயரமான வனவிலங்கு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, ராஜாஜி தேசிய பூங்காவில் கட்டப்பட்டு வருகிற இந்தப் பாதை வனவிலங்குகளைப் பாதுகாப்பதுடன் பயண நேரத்தையும் குறைக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய உயரமான வனவிலங்கு வழித்தடமானது இங்குள்ள விலங்குகளுக்கு அணைகள், சாலைகள் போன்றவற்றின் குறுக்கே செல்லும் பாதையை வழங்கும். இதனைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்!

வனவிலங்கு நடைபாதை என்றால் என்ன?

வனவிலங்கு நடைபாதை என்றால் என்ன?

வனவிலங்கு தாழ்வாரம் என்பது வனவிலங்குகளுக்கு அணைகள், சாலைகள் மற்றும் இரயில்வே போன்ற செயற்கைத் தடைகளைக் கடந்து செல்லும் வாழ்விடப் பகுதியாகும். இது வாழ்விட தாழ்வாரம் அல்லது பசுமை நடைபாதை என்றும் அழைக்கப்படுகிறது.

இது, வனவிலங்குகளை வாழ்விடங்களுடன் இணைப்பதுடன், விலங்குகளின் இடம்பெயர்வு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை எளிதாக்குகின்றன.

தற்போது, 340 மீட்டர் தாட் காளி சுரங்கப்பாதை மற்றும் சுற்றியுள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் உயரமான தாழ்வாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரு மாநிலங்களை இணைக்கும் வழித்தடம்

12 கிலோமீட்டர் உயரமுள்ள வனவிலங்கு வழித்தடமானது உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தில் கணேஷ்பூர்-மொஹந்த் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனுடன் இணைக்கும்.

யானைகள், புலிகள் உட்பட ஏராளமான வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஷிவாலிக் வனப்பகுதிக்கு இடையே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 72A ன் நீளத்தில் இந்தப் பாதையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டின் ஒரு பக்கத்தில் ராஜாஜி புலிகள் காப்பகம் உள்ளது.

இது பயணிகளுக்கு எவ்வாறு உதவப் போகிறது?

இது பயணிகளுக்கு எவ்வாறு உதவப் போகிறது?

டெல்லி-சஹாரன்பூர்-டேஹ்ராடூன் பொருளாதார வழித்தடம் முடிவடைந்தவுடன், இரு நகரங்களுக்கிடையேயான தூரம் 235 கி.மீ லிருந்து 210 கி.மீ ஆகக் குறைக்கப்படும். இது தற்போதைய பயண நேரமாக இருக்கும் ஆறரை மணி நேரத்தை வெறும் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். நெடுஞ்சாலை ஓரங்களில் வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சஹாரன்பூர், பாக்பத், ஷாம்லி மற்றும் காசியாபாத் போன்ற நகரங்கள் வழியாக டெல்லியின் அக்ஷர்தாமில் இருந்து உத்தரகாண்டின் டேராடூனுடன் இந்த பாதை இணைக்கும் என்று கூறப்படுகிறது. இது டெல்லியிலிருந்து முசோரி, கனடல் மற்றும் பல இடங்களுக்கு விரைவாகச் செல்லவும் இது உதவும்.

இதனுடன் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் பல்வேறு விஷயங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் இது கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, நீங்களும் இந்த வழியில் செல்லும் போது வனவிலங்குகளைக் கண்டுக்கொண்டே பயணம் செய்யலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+