இந்த நவீன உலகில் எது தான் சாத்தியம் இல்லை? ஆகாயத்தில் பறப்பது, விண்வெளிக்கு செல்வது, நீருக்கடியில் தங்கி இருப்பது என எல்லாமுமே விஞ்ஞானம் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு கடலுக்கடியில் ரயில் இயக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. துபாயிலிருந்து மும்பைக்கு இடையேயான 2,000 கிமீ தூரத்தை, நீருக்கடியில் மணிக்கு 600 கிமீ செல்லும் ரயில் கடக்க UAE முயற்சி செய்து வருகிறது!
துபாய் to மும்பை கடலுக்கடியில் ரயில்
உங்கள் இலக்கை நோக்கி அதிக வேகத்தில் பயணிக்கும்போது கடல்வாழ் உயிரினங்களின் பார்வையுடன், ஆழமான நீலக் கடலில் ஒரு ரயிலை கற்பனை செய்து பாருங்களேன். ஆனால், கிளாஸ்ட்ரோஃபோபியா அல்லது ஆழமான நீரின் பயத்தால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த பயணம் சரி வராது. என்ன ஆனாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்ட இந்த திட்டத்தை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

துணிச்சலாக முயற்சி செய்யும் துபாய் அரசு
துபாய் to மும்பை நீருக்கடியில் ரயில் திட்டம் 2018 இல் ஒரு கற்பனையான யோசனையாகக் குறிப்பிடப்பட்டது, ஆனால் இப்போது அது விரைவில் நிஜமாகி வருகிறது, ஆனால் அதற்கு ஏகப்பட்ட அளவிற்கு பணம் செலவாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் துபாய் அரசு இந்த முயற்சியை தன் கையில் எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இரு நகரங்களுக்குமிடையே புது விதமான போக்குவரத்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஆலோசகர் பணியகம் இரயில்வே மற்றும் அத்தகைய பயணத்திற்குத் தேவையான இரயில் வகைக்கான வரைபடத்தை உருவாக்கி வருவதால், இரு நகரங்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கவும், பிராந்தியத்திற்கு புதுமையான ஒரு போக்குவரத்து முறையை வழங்கவும் துபாய் அரசு நம்புவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

600-1000 கிமீ வேகத்தில் செல்லப் போகும் ரயில்
துபாயிலிருந்து 1,200 மைல் (2,000 கிமீ) தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு விமானங்களும், கப்பல்களும் இயக்கப்படுகின்றன. இப்போது புதிதாக அதில் நீருக்கடியில் ரயில் போக்குவரத்தும் சேரவுள்ளது. இது பொதுப் போக்குவரமாகவும், நீர் மற்றும் எண்ணெய்க்கான கேரியராகவும் பயன்படுத்தப்படலாம், வேகம் மணிக்கு 600-1000 கிமீ வேகத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்
இது ஒரு அற்புதமான யோசனையாக இருந்தாலும், இங்கிலாந்தை பிரான்சுடன் இணைக்கும் சேனல் சுரங்கப்பாதை 1994 முதல் செயல்படுவதால் இது முதல் நீருக்கடியில் ரயிலாக இருக்காது. பயோ சிட்டிக்கான கட்டுமானம் ஏற்கனவே நடந்து வருவதால், 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் பயணிக்க உங்களுக்கு ஆசையாக உள்ளதா?
துபாய்-மும்பை ரயில் வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் இது செங்கல் சுரங்கச் சுவர்களுக்குப் பதிலாக, பயணிகளுக்கு அதன் அனைத்து மகிமையிலும் கடலைப் பார்க்க அனுமதிக்கும் ஜன்னல்களுடன் கூடிய காட்சி அனுபவமாக இருக்கும். ஆழ்கடலில் கடல் உயிரினங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே இந்த த்ரில்லான ரைடு போக உங்களுக்கு ஆசையாக உள்ளதா?



Click it and Unblock the Notifications



