தமிழ்நாடு இடைவிடாது மற்றும் பரவலான மழையை எதிர்கொள்ளும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளுக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கனமழையின் தாக்கத்தை குறைக்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாதகமற்ற வானிலை நிலைமைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை பெருநகர நிர்வாகம் பல முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல இடங்களில் நீர் தேங்கிநிற்கும் நிலையை சமாளிக்க, நிர்வாகம் மழைநீர் வடிகால்களுக்கு நீரை தீவிரமாக வெளியேற்றி வருகிறது. கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்க, கூடுதலாக முன்னேற்பாடுகளை எடுத்ததால், சென்னையின் தாழ்வான பாதைகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை சற்று குறைந்து உள்ளது.
விழுந்த மரங்களை உடனடியாக அகற்றியதும் நகரத்தின் சாலைகளை தெளிவாகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் வைத்திருப்பதில், சென்னை மாநகராட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது.

அவசர உதவிக்கு
1913 , 044 25619204, 044 25619206, and 044 25619207 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
சென்னை மாநகராட்சி, கனமழை காலத்தில் மக்களுக்கு உதவ 1913 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அரசு மக்கள் TN அலர்ட் பயன்பாட்டின் மூலம் வானிலை நிலைமைகளைப் பற்றி அறித்து கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
கனமழை பெய்து வரும் நிலையிலும் , விமானம் மற்றும் ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் உட்பட செயல்பாட்டில் இருந்தன.
இது நகரத்தின் உள்கட்டமைப்பின் நெகிழ்ச்சி மற்றும் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முன்கூட்டிய நடவடிக்கைகளின் செயல்திறனை காட்டுகிறது.
முதல்வர் மு.க., ஸ்டாலின், கனமழையின் காரணமாக மாநிலத்தின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.
அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை (TNDRF) நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டார். இந்த முன்னெச்சரிக்கை, கமக்கள் மற்றும் உள்கட்டமைப்பை கனமழையின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொத்தைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ளும்படி அறிவுறுத்த பட்டுள்ளனர்.

வெள்ளத்திற்கு பாதிக்கப்படக்கூடியதாக அறியப்பட்ட மடிப்பாக்கத்தில் உள்ள ராம் நகரில், கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அருகிலுள்ள வேளச்சேரி பாலத்தில் நிறுத்தியுள்ளனர்.
இது தென் சென்னையின் ஒரு முக்கிய இணைப்பாகும். அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிகமாக ஹோட்டல்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இது சூழ்நிலையின் தீவிரத்தையும், கனமழையால் ஏற்படும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
நீர் மட்டத்தை நிர்வகித்தல் மற்றும் ஆய்வுகள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிலைமையை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். வேளச்சேரி அருகிலுள்ள நாராயணபுரம் ஏரி உட்பட பல்வேறு இடங்களை அவர் ஆய்வு செய்ததுள்ளார்.
ஏரியில் இருந்து அதிகப்படியான மழைநீர் கால்வாய்களுக்கு அவ்வப்போது வெளியேறுகிறது என, அதிகாரிகள் துணை முதல்வரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், துணை முதலமைச்சர் சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை, அதன் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தில் பார்வையிட்டார்.

மழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்க நகரத்தின் தயார்நிலையை மதிப்பாய்வு செய்து மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மழைக்கு நகரத்தை ஒருங்கிணைத்து, நிவாரண நடவடிக்கை சார்ந்த முயற்சிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை, தாழ்வு மண்டலம் நன்கு குறிக்கப்பட்ட அமைப்பாக மாறியதால் சூழலை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னை பெருநகர நிர்வாகம், மாநில அரசு மற்றும் மக்கள் தங்களது இணைந்த முயற்சிகள் புயலை எதிர்கொள்ளும் உறுதியான அணுகுமுறையை காட்டுகிறது.
மழை, மக்களின் தினசரி வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் , உள்கட்டமைப்பு பராமரிப்பு சார்ந்து எடுக்கப்பட்ட முன்கூட்டிய நடவடிக்கைகள், மக்கள் மற்றும் அதன் வளங்களின் மீது பருவமழையின் தாக்கத்தை குறைக்கும் என்பது பாராட்டுக்குரியது.



Click it and Unblock the Notifications





