Search
  • Follow NativePlanet
Share
» »தனி ஆளாக மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு ஆப்பு வைத்த மோடி – லட்ச்சதீவுகளுக்கு படையெடுக்கும் இந்திய பிரபலங்கள்!

தனி ஆளாக மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு ஆப்பு வைத்த மோடி – லட்ச்சதீவுகளுக்கு படையெடுக்கும் இந்திய பிரபலங்கள்!

இந்திய பிரதமர் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு, நாட்டிற்கு பல நலத்திட்டங்களை அறிவித்தார். அத்துடன் லட்ச்சதீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் ஊடங்கங்களில் வெளிவந்த நாளிலிருந்து மாலத்தீவு மக்களும், அந்நாட்டு அதிகாரிகளும் கொதித்தெழுந்து சாடை பேச்சு பேசி வருகின்றனர். இந்திய மக்கள் சும்மா இருப்பார்களா? X தளத்தையும், இன்ஸ்டாகிராம் தளத்தையும் திறந்தாலே இதைப் பற்றிய செய்திகள் தான். மோடியின் லட்சத்தீவு வருகைக்கும் மாலத்தீவு நாட்டிற்கும் என்ன சம்மந்தம்?

மாலத்தீவை விட அழகிய தீவு - நம் லட்சத்தீவு

என்ன வளங்கள் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை! உலகிலேயே மொத்தமாக 9 வகையான வானிலை தான். ஆனால் அவை அனைத்தும் இந்தியாவில் உள்ளன. இந்திய பிரபலங்களும், இந்திய சுற்றுலாப் பயணிகளும் அதிகப்படியாக செல்லும் நாடுகளில் ஒன்று மாலத்தீவு. ஆனால் கேரளாவுக்கு அருகில் லக்கேடிவ் கடலில் அமைந்திருக்கும் லட்சத்தீவுக்கும் மாலத்தீவுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான நிலப்பரப்புகள், அழகிய தீவுகள், வெள்ளை மணல், பவளப்பாறைகளை கொண்டுள்ள இடமாகும்.

primeministermodivisitedlakshadweep

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்

கேரளாவின் கடற்கரையில் உள்ள லக்கேடிவ் கடலில் உள்ள 36 பவளப்பாறைகள் மற்றும் பவளப்பாறைகள் கொண்ட வெப்பமண்டல தீவுக்கூட்டம். மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தில் 'லட்சத்தீவு' என்ற பெயருக்கு 'நூறாயிரம் தீவுகள்' என்று பொருள். அமைதியான கடற்கரைகள், நீல நீர், வெள்ளை மணல், நட்பு மனிதர்கள் மற்றும் தீவிர வணிகமயமாக்கலின் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கையானது இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும்.

பிரதமர் மோடியால் கூகுளில் முதலிடம் பிடித்த லட்சத்தீவு

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஸ்நோர்கெல்லிங், வெள்ளை மணலில் நடப்பது அல்லது பரந்த நீலக் கடலுக்கு முன்னால் கன்னி கடற்கரையில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படங்கள் இந்தியாவில் வைரலாகி, கூகுள் தேடல்களில் பெரும் எழுச்சியைத் தூண்டியது. பிரதமரின் வருகைக்கு பின்னர் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இடங்களில் லட்சத்தீவு முதலிடத்தை பிடித்துள்ளது.

தானாகவே வம்புக்கு வந்த மாலத்தீவு

அவரது அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிரதமரோ அல்லது வேறு எந்த இந்திய அரசாங்க அதிகாரியோ லட்சத்தீவுகளை ஊக்குவிக்கும் போது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான மாலத்தீவு அல்லது வேறு எந்த தீவு நாடு பற்றியும் எந்தக் குறிப்பும் தெரிவிக்கவில்லை. இது எப்படி சமூக ஊடகக் கருத்துகளைத் தூண்டியது, தாமதமாக இந்தியா குறித்த மாலத்தீவு அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் இது எவ்வாறு தொடர்புடையது? மாலத்தீவு மக்களே இதனை தங்களுடன் தொடர்பாக்கி கொண்டு சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்து வருகின்றனர்.

கொதித்தெழுந்த மாலத்தீவு மக்கள்

பிரதமர் மோடியின் இடுகைக்குப் பிறகு, சில முக்கிய மாலத்தீவு சமூக ஊடக பயனர்கள் இந்தியர்கள் மற்றும் இந்தியப் பிரதமரைக் குறிவைத்து இனவெறி மற்றும் இழிவான கருத்துகளுடன் பதிலளித்தனர். "நடவடிக்கை நன்றாக உள்ளது. இருப்பினும், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்கள் எப்படி வழங்க முடியும்?'', "என்ன ஒரு கோமாளித்தனம்'', "ஏணி வைத்தாலும் நீங்கள் மாலத்தீவை நெருங்க முடியாது", இது போன்ற பல இழிவான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் மாலத்தீவு மக்கள்.

primeministermodivisitedlakshadweep1

பதிலடி கொடுத்த இந்திய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள்

இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இரு நாட்டு மக்களும் இடையில் போர் வெடித்துள்ளது. எதிர்ப்பின் அடையாளமாக பல இந்தியர்கள் தீவு நாட்டிற்கு திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளதாக செய்திகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து, சில இந்திய பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மாலத்தீவுகள் மற்றும் அதன் சுற்றுலா இடங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா, நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார், அமிதாப்பச்சன், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக மாலத்தீவுகளைத் தவிர்க்குமாறு இந்தியர்களை வலியுறுத்தியுள்ளனர்.

சமூகவலைத்தளத்தில் பிரபலமடைந்த #BoycottMaldives

#BoycottMaldives X இல் பிரபலமடையத் தொடங்கியது மற்றும் நிறைய இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணங்களை ரத்து செய்தனர். "மாலத்தீவுகளைப் புறக்கணித்து, இந்தியாவின் மறைவான ரத்தினமான லட்சத்தீவுகளை ஆராய்ந்து, உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாற உதவுங்கள்!" என்று ஒரு பயனர் X இல் எழுதினார்.

சுற்றுலாவை பெரிதும் சார்ந்துள்ள மாலத்தீவு

மாலத்தீவு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீவுக்குச் செல்லும் முதல் பத்து நாட்டினரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டில் மட்டும், மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்கள் 200,000 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாப் பயணிகளை உருவாக்கினர், மாலத்தீவுகள் சுற்றுலாவை பெரிதும் சார்ந்துள்ளது மற்றும் தொழில்துறையானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதத்தை கொண்டுள்ளது.

செக்மேட் வைத்த பிரதமர் மோடி

ஆனால் சமீபகாலமாக, மாலத்தீவுகள் விரோதப் போக்கை கடைப்பிடித்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு கவலை அளிக்கிறது. மாலத்தீவில் புதிய அரசாங்கம் சீனாவுடன் பழகுவதாக கருதப்படுகிறது. துருக்கிக்குப் பிறகு, மாலத்தீவு அதிபர் முய்ஸூ பதவியேற்ற பிறகு இரண்டாவது பயணமாக சீனாவைத் தேர்ந்தெடுத்தார். துருக்கியும் சீனாவும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் மாலத்தீவுக்கு செக் வைப்பதற்காக பிரதமர் லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கிறார் என்று பேசப்படுகிறது.

ஆனால், லட்சத்தீவு உண்மையில் மிகவும் ஒரு அழகான இடம், நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

More News

Read more about: lakshadweep travel news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+