பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து தப்பித்து, நதிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலுக்கு நடுவே அமைதியாக பொழுதை போக்கி உயிருக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதே க்ரூஸ் சுற்றுலா. சமீபகாலமாக இந்தியாவில் க்ரூஸ் சுற்றுலா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது, இந்தியாவில் கேரளா, கோவா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே க்ரூஸ் சுற்றுலா கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இலங்கைக்கு இந்தியாவின் முதல் சர்வதேச பயணக் கப்பலான "எம்வி எம்பிரஸ்" (MV Empress) என்ற முதல் சர்வதேச பயணக் கப்பலை சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பல வசதிகள் அடங்கிய MV எம்பிரஸ் அறிமுகமானது இந்தியாவில் கப்பல் சுற்றுலாவிற்கு ஒரு பெரிய ஊக்கமாக மாறியுள்ளது!

இந்தியாவில் ஏற்கனவே வெற்றிகரமாக கால் பதித்திருக்கும் க்ருஸ் சுற்றுலா
இந்திய நாடு நீண்ட கடற்கரை மற்றும் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது கப்பல் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது. பல நீர்நிலைகள் இந்தியாவில் உள்ளதால் கப்பல் சுற்றுலாவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, சுற்றுலாவின் ஒரு பகுதியாக நீர் விளையாட்டுகளுக்கு வாய்ப்பு உள்ளது. இதை வைத்து, நாட்டின் முதல் சர்வதேச பயணக் கப்பலைத் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் முதல் சர்வதேச க்ருஸ் சுற்றுலா
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சென்னையில் இருந்து இலங்கைக்கு இந்தியாவின் முதல் சர்வதேச பயணக் கப்பலான "எம்வி எம்பிரஸ்" என்ற முதல் சர்வதேச பயணக் கப்பலை சென்னையில் ஜூன் 5 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி எம்வி எம்பிரஸ் கப்பல் சென்னையில், 17.21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சர்வதேச கப்பல் சுற்றுலா முனையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டது.
கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயம்
சோனோவால் கூறுவது என்னவென்றால் நமது கடலோரப் பகுதியைச் சுற்றியுள்ள நமது வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன், இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் சாத்தியம் மகத்தானது. இன்று (ஜூன் 5), சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் கப்பல் சேவையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில், இது நாட்டில் கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் மற்றும் துறைமுக அதிகாரிகள் துறைமுகத்தில் 2,500 மரக்கன்றுகளை நட்டனர்.

இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இரவுகளுக்கான தொகுப்புகள்
3,000 விருந்தினர்கள் தங்கக்கூடிய இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட கப்பல் ஆடம்பர மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான அனைத்து வசதிகளுடன் நிறைந்துள்ளது, MV எம்ப்ரஸ் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இரவுகளுக்கான தொகுப்புகளை வழங்குகிறது. இது சென்னை திரும்புவதற்கு முன், இலங்கையில் உள்ள மூன்று துறைமுகங்களுக்குச் செல்கிறது. அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகியவை இந்த இலக்குகளாகும். மேலும், மூன்று புதிய சர்வதேச கப்பல் முனையங்கள் 2024 ஆம் ஆண்டளவில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கப்பலில் கேசினோ கேம்கள்
பல இடங்களைத் தவிர, கப்பல் கேசினோ கேம்களை வழங்குகிறது, அதில் பயணிகள் பணத்தை வெல்லலாம் அல்லது இழக்கலாம். இந்தியாவில் இந்த விளையாட்டு சட்டவிரோதமானது என்றாலும், சர்வதேச கடல் பகுதியில் மட்டுமே இது விளையாடப்படும் என்று ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் அதிகரிக்கும் கப்பல் சுற்றுலா
இந்த கப்பல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அதிக பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அதிகமான மக்கள் கடல் சார்ந்த சுற்றுப்பயணங்களை அனுபவிக்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரின் கூற்றுப்படி, பயணக் கப்பல்களின் அளவு 2023 இல் 208 இல் இருந்து 2030 இல் 500 ஆகவும், 2047 இல் 1,000 ஆகவும் அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அந்த வெளியீடு கூறுகிறது. மேலும், அந்த கப்பல்களில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.

அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவிலும் கப்பல் சுற்றுலா
அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு சுற்றுவட்டங்களில் புதிய கப்பல் சுற்றுலா முனையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் முழுவதும் படகு சுற்றுகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications



