அக்டோபர் என்றாலே இந்தியா முழுக்க பல்வேறு பண்டிகைகளின் கொண்டாட்டம் என்று தான் அர்த்தம். துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய இந்திய பண்டிகைகள் வரிசையாக இருப்பதால், பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 6000 சிறப்பு ரயில்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. எத்தனை சிறப்பு ரயில்கள் இயங்கினாலும் அனைவர்க்கும் இடம் கிடைப்பது இல்லை. உங்கள் அனைவருக்கும் உதவும் வகையில், ரயில்வே VIKALP யோஜனா எனப்படும் மாற்று ரயில் தங்கும் திட்டத்தை (ATAS) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை உபயோகப்படுத்தி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்!
பண்டிகை கால சிறப்பு ரயில்களை அறிமுகம் செய்த இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இந்த பண்டிகைகளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இந்த அதிக தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த காலகட்டத்தில் ஒரு கோடி (10 மில்லியன்) பயணிகளுக்கு சேவை செய்ய சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து வரும் பண்டிகைகளால் அதிகரிக்கும் நெரிசல்
இந்த பண்டிகைகளின் போது அதிக தேவை கொண்ட சில வழித்தடங்கள் முக்கியமாக பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வழிகள் ஆகும், ஏனெனில் இந்த இடங்கள் கொண்டாட்டத்திற்கான மையங்களாக உள்ளன. தென்னிந்தியாவில் வேலை செய்யும் வட மாநில மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் கட்டாயம் பயணம் செய்வார்கள். இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜை அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியும், நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சத் பூஜையும் நடைபெறும்.

இந்திய ரயில்வேயின் திறன் அதிகரிப்பு
இந்த ரயில்கள் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், கூடுதல் ரயில்கள் மற்றும் பெட்டிகள் ஒரு கோடி பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்த சீசனுக்காக 5,975 சிறப்பு ரயில்களை அனுப்புவதாக இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது. ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன, இது இந்த ஆண்டு திறன் அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது.
VIKALP யோஜனா பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம்
இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், குறிப்பாக தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்னதாக! பண்டிகைக் காலத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கல் இன்னும் நீடிக்கிறது. எனவே, உங்கள் அனைவருக்கும் உதவும் வகையில், ரயில்வே VIKALP யோஜனா எனப்படும் மாற்று ரயில் தங்கும் திட்டத்தை (ATAS) அறிமுகப்படுத்தியுள்ளது.

VIKALP யோஜனா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1. VIKALP யோஜனாவிற்கும் கூட, பயணத் தேதிக்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவைத் திறக்கும். அவசர காலங்களில், பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் வசதியுடன் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம்.
2. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகளுக்கு VIKALP விருப்பம் தானாகவே பரிந்துரைக்கப்படும்.
3. இந்த திட்டத்தின் மூலம் அந்த வழித்தடத்தில் உள்ள மற்ற ரயில்களை நீங்கள் தேர்வு செய்யலாம். மாற்று ரயிலில் இருக்கை அல்லது கோச்செட் கிடைத்தவுடன், அந்த ரயிலில் உங்களுக்கு இருக்கை ஒதுக்கப்படும்.

4. புதுப்பித்த நிலையில் இருக்க, நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் வரலாற்றைப் பார்வையிடுவதன் மூலம் இந்த விருப்பத்தின் நிலையைச் சரிபார்க்கலாம்.
5. பயணிகள் 30 நிமிடங்கள் முதல் 72 மணி நேரத்திற்குள் போர்டிங் ஸ்டேஷனில் இருந்து இலக்கை அடைய 7 ரயில்களைத் தேர்வு செய்யலாம்.
6. மேலும், VIKALP யோஜனா விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது, நீங்கள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவீர்கள் என்று அர்த்தமல்ல, அது ஒன்றைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications





