Search
  • Follow NativePlanet
Share
» »மக்களுக்கு அயோத்தி மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டதா – பல விமான சேவைகள் ரத்து!

மக்களுக்கு அயோத்தி மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டதா – பல விமான சேவைகள் ரத்து!

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் இருந்து அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டட முடிவுகள் எடுக்கப்பட்டு 2024 இல் தான் ராமர் கோயில் கட்டப்பட்டு மிக பிரமாண்டமாக திறப்புவிழா செய்யப்பட்டது.

இந்த ஒரு கோயிலுக்காக அந்த முழு ஊரே மாற்றியமைக்கப்பட்டது, சாலைகள் புதிய விமான நிலையம் என சகலமும் வந்து சேர்ந்தது. மக்களும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்து வந்தனர். ஆனால், தற்போது 13 நகரங்களில் இருந்து அயோத்திக்கு செல்லும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போதிய கூட்டம் இல்லாததால், இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது!

அயோத்தியின் சுற்றுலா மோகம் முடிவுக்கு வந்து விட்டதா

ஜனவரியில், ராமர் கோவில் திறப்பு விழாவுடன், அயோத்தியில் சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர். இந்த மோகத்தால், இந்த நகரத்தில் செயல்படத் தொடங்க விமான நிறுவனங்களிடையே அவசரம் ஏற்பட்டது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக, குறைந்த தேவை காரணமாக பல விமான நிறுவனங்கள் பல இந்திய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை நிறுத்தியுள்ளன. இது அயோத்தியின் சுற்றுலா மோகம் முடிவுக்கு வருமா என்ற பெரிய கேள்வியை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

flights from 13 cities to Ayodhya discontinued their services

13 நகரங்களில் இருந்து சேவைகள் நிறுத்தம்

ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டைக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக, அயோத்தியின் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் விமான சேவைகளை தொடங்குவதற்கு விமான நிறுவனங்களிடையே அவசரத்தைக் கண்டது. உண்மையில், அறிக்கையின்படி, அந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள சுமார் 20 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்களை விமான நிலையம் கையாண்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், எட்டு மாதங்களுக்குள், பல விமான நிறுவனங்கள் குறைந்தது 13 இந்திய நகரங்களில் இருந்து அயோத்திக்கு இயக்கங்களை நிறுத்திவிட்டன.

பருவமழை காரணமாக இருக்கலாம்

கோவில் நகரத்தில் பயணிகளின் தேவை குறைவாக இருப்பதாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என விமான நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. இருப்பினும், அயோத்தி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், பருவமழை காரணமாக சுற்றுலாத்துறை மந்தமாக இருப்பதாக நம்புகின்றனர். விமான நிலைய அதிகாரி ஒருவர் மழைக்காலம் முடிந்ததும், அயோத்தியிலும் சுற்றுலா தொடங்கும் என்று கூறினார்.

ayodhyarammandircrazegoingdown1

ஹைதராபாத், பெங்களூரு, பாட்னாவில் இருந்து சேவை ரத்து

கடந்த சில வாரங்களாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் பாட்னாவில் இருந்து அயோத்திக்கு பயணிகளின் தேவை குறைவாக இருப்பதால் நேரடி விமானங்களை நிறுத்தியுள்ளது. இந்த விமான சேவை நிறுத்தம் அயோத்தியின் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால சாத்தியக்கூறு பற்றிய கவலையையும் தூண்டியுள்ளது.

வானிலை சீரானதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை உயரும் என நம்பிக்கை

பல விமானங்கள் நிறுத்தப்பட்டதைத் தவிர, பல மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கடும் வெப்பம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கோவில் பூசாரிகள் கருதுகின்றனர். வானிலை சீரானதும், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நகருக்குள் உயரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அயோத்தி விமான நிலையத்தின் இயக்குநர் வினோத் குமார் கர்க், சுற்றுலாப் பயணிகள் கோயில் நகரத்திற்குச் செல்வதைத் தவிர்ப்பதற்கு வானிலை மிகப்பெரிய காரணமாக இருக்கலாம் என்று கூறினார். மழைக்காலம் முடிந்ததும், அயோத்தியில் சுற்றுலா மேம்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

Read more about: ayodhya news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+