Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவுக்கு கிடைத்த பெருமை – இந்தியாவின் ‘முதல் இலக்கிய நகரம்’ என்கிற யுனெஸ்கோவின் விருது பெற்ற கோழிக்கோடு!

கேரளாவுக்கு கிடைத்த பெருமை – இந்தியாவின் ‘முதல் இலக்கிய நகரம்’ என்கிற யுனெஸ்கோவின் விருது பெற்ற கோழிக்கோடு!

கோழிக்கோடு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுகிறது! அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கோழிக்கோடு இனி வரும் ஆண்டுகளில் ஜூன் 23ஆம் தேதியை 'இந்தியாவின் முதல் இலக்கிய நகர தினமாக' கொண்டாடும் என்று கேரள அரசு நிர்ணயித்துள்ளது. ஆம்! இந்த நகரம் யுனெஸ்கோ இலக்கிய நகரமாக நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரமாக மாறி வரலாறு படைத்துள்ளது. இது கேரளாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமையான தருணம் தான்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றுநினைக்கிறீர்களா? விஷயம் கீழே!

இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த கோழிக்கோடு

கோழிக்கோடு கேரளாவின் ஒரு வண்ணமயமான நகரமாகும், இது ஒரு வளமான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரம் ஒரு பழங்கால வர்த்தக மையமாகவும், போர்த்துகீசிய ஆய்வாளர் வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தியாவில் தரையிறங்கிய இடமாகவும் புகழ் பெற்றது. இன்று, கோழிக்கோடு அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை நவீன முன்னேற்றங்களுடன் கலக்கிறது, பார்வையாளர்களுக்கு கேரளாவின் கடலோர வசீகரம் மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான பன்முக அனுபவத்தை வழங்குகிறது.

நூற்றுக்கணக்கான நூலகங்களுக்கு தாயகமாக கோழிக்கோடு

கோழிக்கோடு நகரம் 500 க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகிறது, மேலும் பல தசாப்தங்களாக பழம்பெரும் மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் இலக்கிய நடவடிக்கைகளின் தளமாக இருந்து வருகிறது. UCCN இல் இணைந்த 55 புதிய நகரங்களில் இந்தியாவில் இருந்து குவாலியர் மற்றும் கோழிக்கோடு ஆகியவை அடங்கும். புதிய பட்டியல் அக்டோபர் 31 அன்று வரும் உலக நகரங்கள் தினத்தன்று அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

keralakozhikode

புத்தக பிரியர்களுக்கான புகலிடம்

ஒரு காலத்தில் ஜாமோரின் நகரம் என்று அறியப்பட்ட கோழிக்கோடு, ஆங்கிலேயர் ஆட்சியின் போது காலிகட் என்றும் அழைக்கப்பட்டது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெர்சியர்கள், அரேபியர்கள், சீனர்கள் மற்றும் இறுதியில் ஐரோப்பியர்கள் போன்ற பல வெளிநாட்டினருக்கு கடற்கரைக்கு நுழைவாயிலாக இருந்தது. கேரளாவின் சுதந்திர இயக்கத்தின் தொட்டிலான கோழிக்கோடு பல தசாப்தங்களாக புத்தகத் திருவிழாக்களுக்கான முக்கிய இடமாக இருந்து வருகிறது.

keralakozhikode heritage site

இந்தியாவின் முதல் இலக்கிய நகரம் - கோழிக்கோடு

மாநில உள்ளாட்சித் துறை (LSGD) அமைச்சர், M B ராஜேஷ், ஞாயிற்றுக்கிழமை ஜூன் 23 ஆம் தேதி இங்கு ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வில், UCCN இன் 'இலக்கியம்' பிரிவில் இடம் பெற்ற கோழிக்கோடு சாதனையை அறிவித்தார். ஆம்! கோழிக்கோடு ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் முதல் யுனெஸ்கோ 'இலக்கிய நகரம்' என அறிவிக்கப்பட்டது. மனிதாபிமானம், நல்லிணக்கம், வலுவான நீதி உணர்வு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஆன்மா கொண்ட நகரம் என்று கோழிக்கோடு விவரித்தார்.

keralakozhikode1

இலக்கிய ஜாம்பவான்களுக்கு பெயர் பெற்ற கோழிக்கோடு

கொல்கத்தா போன்ற வளமான கலாச்சார வரலாற்றைக் கொண்ட நகரங்களைத் தோற்கடித்து யுனெஸ்கோவிடமிருந்து 'இலக்கிய நகரம்' என்ற அடையாளத்தைப் பெறுவதில் கோழிக்கோடு நகர மாநகராட்சியின் திறமையான செயல்பாடு முக்கிய பங்கு வகித்ததாக அமைச்சர் கூறினார். மறைந்த எஸ்.கே.பொட்டக்காட் மற்றும் வைக்கம் முகமது பஷீர் போன்ற இலக்கிய ஜாம்பவான்களுக்கு பெயர் பெற்ற கோழிக்கோட்டின் 'இலக்கிய நகரம்' தினமாக வரும் ஆண்டு முதல் ஜூன் 23ஆம் தேதி கொண்டாடப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 2023 இல், கோழிக்கோடு யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் (UCCN) 'இலக்கியம்' பிரிவில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கோழிக்கோட்டிற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது முழு இந்தியாவுக்கும் பெருமையான ஒரு தருணம் என நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்!

More News

Read more about: travel news kerala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+