Search
  • Follow NativePlanet
Share
» »யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் புதுச்சேரி – வியக்க வைக்கும் காரணங்கள்!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் புதுச்சேரி – வியக்க வைக்கும் காரணங்கள்!

ஒரு நகரத்தை பாரம்பரிய நகரமாக மாற்றுவது எது? எந்த நகரமும் பாரம்பரிய நகரமாக மாற முடியுமா? மற்ற நகரங்களில் இருந்து பாரம்பரிய நகரம் எப்படி வேறுபடுகிறது?

முழு நேரமும் இளசுகள் கூட்டத்தினால் நிரம்பி வழியும் புதுச்சேரி விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் இடம் பெற போகிறது என்றால் நம் அனைவர்க்கும் வியப்பாக இருக்கிறது தானே! ஆம்! புதுச்சேரி யூனியன் பிரதேசம் அந்த மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெறுவதற்கான நோக்கில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பழைய பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி தமிழ் மற்றும் காலனித்துவ சாரத்தின் கண்கவர் கலவையாகும். உலக பாரம்பரிய நகரத்தின் குறிச்சொல்லைப் பெற, இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்! இந்த சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றிய மேலும் பல ருசிகர தகவல்கள் இதோ!

யுனெஸ்கோவின் பாரம்பரிய தளத்தில் இடம்பெறுவது எப்படி?

ஒரு நகரத்தை பாரம்பரிய நகரமாக மாற்றுவது எது? எந்த நகரமும் பாரம்பரிய நகரமாக மாற முடியுமா? மற்ற நகரங்களில் இருந்து பாரம்பரிய நகரம் எப்படி வேறுபடுகிறது? என உங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரத்தின் குறிச்சொல்லைப் பெறுவதற்கு நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் வளர்ச்சி மட்டுமே காரணம் அல்ல. இதற்காக, முழு நகரமும் அதில் உள்ள அனைத்தும் உள்ளூர் மக்களின் அடையாளத்திற்கு இன்றியமையாத அதன் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாறு பராமரிக்கப்படும் வகையில் அதனை பேணி காக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்

இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து 43 இடங்கள் இடம் பெற்றுள்ளன. முதன் முதலில் ஆக்ரா கோட்டை மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள் 1983 இல் இந்தப் பட்டியலில் இடம் பெற்றன. தாஜ்மஹால், கோனார்க் சூரியன் கோவில், மகாபலிபுரம் நினைவுச்சின்னங்கள், ஹம்பி, கஜுராஹோ, பதேபூர் சிக்ரி, கோவாவில் உள்ள தேவாலயங்கள், பட்டாடக்கள், தமிழ்நாட்டில் உள்ள சோழர் கோவில்கள், எலிபெண்டா குகைகள், குதூப்மினார், நீலகிரி மலை ரயில், சாஞ்சி ஸ்தூபி உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 இடங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட 114 பாரம்பரிய கட்டிடங்கள்

புதுச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட 114 பாரம்பரிய கட்டிடங்கள்

புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் பெரும் உந்துதலைக் கொடுக்கும் வகையில், புதுச்சேரி அரசு, பவுல்வர்டில் உள்ள பிரெஞ்சு மற்றும் தமிழ் குடியிருப்புகளில் உள்ள 114 கட்டிடங்களை பாதுகாக்கப்பட்ட பாரம்பரியக் கட்டிடங்களாக அறிவித்துள்ளது. மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவின் (SLHCAC) பரிந்துரைகளின் அடிப்படையில் அவை பாரம்பரிய கட்டமைப்புகளாக அறிவிக்கப்பட்டன.

தனியார் மற்றும் அரசு கட்டிடங்கள்

வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த பட்டியலில் அரசுக்கு சொந்தமான 36 கட்டிடங்கள், ஒன்பது பிரெஞ்சு அரசாங்க கட்டிடங்கள், 60 ஆசிரம கட்டிடங்கள் மற்றும் ஒன்பது தேவாலய கட்டிடங்கள் உள்ளன. 114 பாரம்பரிய கட்டிடங்களில், 10 கிரேடு I A கட்டிடங்கள், 87 கிரேடு II மற்றும் 17 கிரேடு III கட்டிடங்கள் இடம் பெற்றுள்ளன.

இடம் பெற்றுள்ள முக்கிய இடங்கள்

இடம் பெற்றுள்ள முக்கிய இடங்கள்

முக்கிய கிரேடு I A கட்டிடங்களில் ஆயி மண்டபம், பழைய லைட் ஹவுஸ், ராஜ் நிவாஸ், செஞ்சி தூண் மற்றும் காந்தி திடல், டூப்ளேயின் சிலை, பிரான்ஸ் தூதரக ஜெனரல், ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம், நோட்ரே டேம் டெஸ் ஏஞ்சஸ் தேவாலயம், முன்னாள் கப்புச்சின் தேவாலயம் மற்றும் கவுபர்ட் சந்தைக் கடிகாரம் ஆகியவை அடங்கும்.

இரண்டாவது பட்டியல் தயாரிப்பு

பாரம்பரிய கட்டிடங்களை கண்டெடுக்க அரசிற்கு உதவியாக இருந்த புதுவையைச் சார்ந்த INTACH நிறுவனத்தின் துணை ஆணையர் திரு. அசோக் பாண்டாகூறுகையில், "புதுச்சேரி திட்ட ஆணையம் (பிபிஏ) இன்டாச் நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய கட்டிடங்களின் இரண்டாவது பட்டியலைத் தயாரித்து வருகிறது, மேலும் பல தனியார் பாரம்பரிய கட்டிடங்கள் இதில் அடங்கும். SLHCAC ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், இரண்டாவது பட்டியல் அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

கூடிய விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் இணையும் புதுச்சேரி

கூடிய விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் இணையும் புதுச்சேரி

புதுச்சேரியை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ பட்டியலிடுவதற்கான ஆவணத்தைத் தயாரிக்க PPA மற்றும் INTACH அடுத்ததாக வேலை செய்யும். இந்தியாவில் தற்போது அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் மட்டுமே உலக பாரம்பரிய நகரங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் முறையான உள்கட்டமைப்பு மற்றும் வெளிச்சம் மற்றும் தெருக் காட்சிகளுக்கு இசைவாக அடையாளங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூடிய விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் புதுச்சேரி இணைய உள்ளது. இதனால் புதுச்சேரியின் மவுசு இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Read more about: puducherry unesco
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+