Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட கற்கால ஓவியங்கள் – எங்கே தெரியுமா?

இந்தியாவில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட கற்கால ஓவியங்கள் – எங்கே தெரியுமா?

இந்தியா வரலாறு மற்றும் பண்டைய கலாச்சாரத்தின் பூமி என்று அனுதினமும் நிரூபித்து உள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான சில நகரங்களும், பிராந்தியங்களும் இந்தியாவில் அமைந்துள்ளன. கற்காலச் சிற்பங்கள், குகைக் கோயில்கள், பண்டைய கால கலைப்பொருட்கள் என ஏராளம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா, மொகஞ்சதாரோ முதல் தற்போது ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் கீழடி வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. இப்பொழுது புதிதாக ஹரியானாவில் உள்ள குருகிராமில் பழங்கால கற்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

10,000 ஆண்டுகள் பழமையான கண்டுபிடிப்புகள்

10,000 ஆண்டுகள் பழமையான கண்டுபிடிப்புகள்

சோஹ்னாவின் தேதார் கிராமத்தின் பாட்ஷாபூர் பகுதியில் கல் செதுக்கல்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது, இது அப்பகுதியின் வரலாற்றை மேலும் விரிவுபடுத்துகிறது. இந்த தளம் மங்கரில் இருந்து 6 கிமீ தொலைவில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கு 2021 ஆம் ஆண்டில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்டைய ஓவியங்கள் கற்காலத்தைச் சார்ந்தவை அதாவது 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மங்கர் கிராமத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்

மங்கர் கிராமத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்

வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் சூழலியல் நிபுணருமான சுனில் ஹர்சனா, ஆரவல்லியில் உள்ள மங்கர் கிராமத்தை ஆராயத் தொடங்கினார். கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு, சுவர்களில் கற்கால ஓவியங்கள் நிறைந்த ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்ததாக தெரிகிறது.. குருகிராமில் உள்ள சோஹ்னாவின் பாட்ஷாபூர் தேதார் கிராமத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள மலையில் மனித கைகள் மற்றும் கால்தடங்கள் மற்றும் விலங்குகளின் வேலைப்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

மனித நாகரிகத்தை குறிக்கும் ஓவியங்கள்

மனித நாகரிகத்தை குறிக்கும் ஓவியங்கள்

கல் சிற்பங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, ஹரியானா தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகத்தின் துணை இயக்குனர் பனானி பட்டாச்சார்யா, "இந்த கண்டுபிடிப்புகள் கற்கால வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் என்று கூறினார். இவை யாவும் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. அதோடு இந்த கற்கால கண்டுபிடிப்புகள் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என நான் நம்புகிறேன். ஆனால் சரியான தேதியை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் அறிய முடியும்" என்று அவர் கூறினார்.

பிரபலமாகும் குருகிராமின் மங்கர்

பிரபலமாகும் குருகிராமின் மங்கர்

பெட்ரோகிளிஃப்களில் குவார்ட்சைட் பாறைகள் மற்றும் கிராஃபிட்டியில் பொறிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களின் கை மற்றும் கால்தடங்களும் இந்த ஓவியங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்கள் ஆரம்பகால கருவிகளை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதைப் பார்க்க நமக்கு இது வாய்ப்பளிக்கிறது. பெரும்பாலான செதுக்கல்கள் விலங்கு பாதங்கள் மற்றும் மனித கால்தடங்கள் ஆகும். சில அடிப்படை சின்னங்கள் உள்ளன, அவை சில சிறப்பு நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சோஹ்னாவின் தேதார் கிராமத்தின் பாட்ஷாபூர் பகுதி இந்த வரலாற்று கண்டுபிடிப்புகளால் மேலும் பிரபலமடைந்துவிட்டது எனலாம்!

More News

Read more about: gurgaon delhi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+