சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடரும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட், சென்னையின் நிலவரம் என்ன என்று பார்ப்போம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சி, வார இறுதியில் இருந்து கடலோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. IMD இன் படி, அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு சூறாவளி சுழற்சியின் செல்வாக்கின் கீழ் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அமைப்பு மேற்கு நோக்கி தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகரும்.
சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை மதியம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15, 2024) வரை தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை
நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் என்னென்ன
நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக மழை தீவிரமடையும். இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் வேகமும் அதிகரிக்கும்
கூடுதலாக, காற்றின் வேகம் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தென்மேற்கு வங்காள விரிகுடாவின் பல பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தயார் நிலையில் இருக்கும் சென்னை
சென்னையில் கடந்த மாத மழை அனுபவத்தின் அடிப்படையில் நிவாரண மையங்கள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications






