Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் - டிக்கெட் கட்டணம், அட்டவணை, நேரம்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் - டிக்கெட் கட்டணம், அட்டவணை, நேரம்!

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி 24.09.2023 அன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தமாக 11 மாநிலங்களில் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ளார்.இந்நிலையில் சென்னை- திருநெல்வேலி உட்பட, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

தினமும் சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் பயணிகள் பயணிக்கின்றனர். கோவைக்கு வந்தே பாரத் துவங்கும் போதே நெல்லைக்கும் இயக்கும்படி பல கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி இப்போது நெல்லைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் பெரிதும் சந்தோஷமடைந்துள்ளனர்.

1

துவங்கப்பட்ட திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்க, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி எஸ்.ஞானதிரவியம், பாஜக அவைத் தலைவரும் எம்எல்ஏவுமான நைனார் நாகேந்திரன் ஆகியோர் திருநெல்வேலியில் விழாவைக் கொண்டாடினர்.

பல அம்சங்கள் பொருந்திய வந்தே பாரத் ரயில்

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ரயில் பயணிகளை அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஏற்றிச் செல்லும். ஒவ்வொரு இருக்கையின் கீழும் சார்ஜிங் பாயிண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் ரயிலில் சிறப்பு பாக்டீரியா எதிர்ப்பு UV விளக்குகள், சிறந்த காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2

குறையும் பயண நேரம்

தற்போது நெல்லை எக்ஸ்பிரஸ் 10.40 மணி நேரமும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 11 மணி நேரமும் சென்னை-திருநெல்வேலி இடையே பயணம் முடிவடைகிறது. திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வந்தே பாரத் அறிமுகம் ஒரு வரப்பிரசாதம். இது இரவு நேர ரயில்களுக்கான தேவையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தென் பகுதிக்கு விரைவான இணைப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மணி நேரத்தில் இலக்கு

காலை திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில், மதியம் சென்னை எழும்பூரை எட்டு மணி நேரத்தில் அடையும் என்று கூறப்படுகிறது. இடைப்பட்ட 650 கி.மீ தூரத்தை எட்டு மணி நேரங்களில் கடப்பது என்பது சிறப்பான விஷயம் தானே. இந்த ரயில் விருதுநகர் மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும், மற்ற சின்ன ரயில் நிலையங்களில் நிற்காது.

தென் மாவட்ட பயணிகள் பலனடைவார்கள்

சென்னை - திருநெல்வேலி - நாகர்கோவில் மார்க்கத்தில் வார இறுதி நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். இச்சூழலை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்கள் பல ஆண்டுகளாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. இருப்பினும், பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகத்தால், இந்த பிரிவில் திருவிழா கூட்டம் மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் திருச்சி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.

டிக்கெட் கட்டண விபரம்

சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் நாற்காலி இருக்கைக்கு ரூ.1,665 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் இருக்கைக்கு ரூ.3,005 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

More News

Read more about: vande bharat indian railways
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+