தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு தயாராகி வருவதாகத் தெரிகிறது. 80 சதவீத பழுதடைந்த பேருந்துகளுடன் இயங்கி வருவதோடு, கடனில் சிக்கித் தவிக்கும் அரசு போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்துகளின் கட்டணம் எந்த வித முன்னறிவிப்புமின்றி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது!
SETC பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு
SETC நிர்வாகம், பேருந்து கட்டணம் வெகுவாக ஒட்டுமொத்தமாக உயர்த்தப்படவில்லை என்றும், அல்ட்ரா டீலக்ஸ் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு டிக்கெட் விலை கிலோமீட்டருக்கு ரூ. 1 ஆகவும், ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு ரூ. 2 ஆகவும் இருக்கும் என்று SETC நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏசி அல்லாத ஸ்லீப்பருக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ.1.55 ஆகவும், ஏசி இருக்கைக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ.1.3 ஆகவும் உள்ளது.

ரூ.3 முதல் ரூ.10 வரை கட்டணத்தில் மாற்றம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் SETC பேருந்துகள் CMBT இலிருந்து கிளம்பாக்கம் KCBTக்கு புறப்படும் இடம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கட்டணப் பட்டியல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. முன்னதாக, பல வழித்தடங்களில், தொலைவு தவறாகக் கணக்கிடப்பட்டதால், மொத்தக் கட்டணத்தில் இருந்து 5 முதல் 7 கி.மீ தூரத்திற்கு கட்டணம் தவிர்க்கப்பட்டது. இப்போது, புதுப்பித்தலுக்குப் பிறகு, மீண்டும் பேருந்து கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற வழித்தடங்களில் ஒரு டிக்கெட்டுக்கு மொத்தம் ரூ.3 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட பேருந்து கட்டணம்
குறிப்பாக பொங்கல் பண்டிகை முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்ததாக வெளியான நிலையில் அரசுவிரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டம் செல்லக்கூடிய பயணிகளுக்கு தூரம் குறைவதால் கட்டணம் குறைக்கப்பட்டது. சில வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் பயணக் கட்டணம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்து கட்டணத்திலும் மாற்றம்
இதேபோல், குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் பஸ்கள் மற்றும் வால்வோ பஸ்களின் டிக்கெட் கட்டணம், கி.மீ.க்கு 60 முதல் 70 பைசா வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, ஏசி பஸ் டிக்கெட் கட்டணம் கி.மீ.க்கு 90 பைசாவும், அதே தூரத்திற்கு வால்வோ பஸ் கட்டணம் 110 பைசாவும் வசூலிக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தை பொறுத்த வரையில், சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், 3 ரூபாயில் இருந்து, 5 ரூபாயாக அதிகரிக்க உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகராப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை
இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்திய மூத்த அதிகாரி ஒருவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் குறைவாக உள்ளது என்றார். "கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் அண்டை மாநிலங்கள் கடந்த 2 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன, ஆனால் தமிழ்நாடு கடந்த 6 ஆண்டுகளில் கட்டணத்தை உயர்த்தவில்லை" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் மாநில அரசு திருத்தம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் தகவல்கள் வெளிவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன!



Click it and Unblock the Notifications





