பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த உலகின் மிகப்பெரிய அழகான நன்னீர் தீவு இந்தியாவில் தான் அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? பல இயற்கை வளங்களால் செழித்து நிற்கும் நம் நாட்டில் இயற்கை அதிசயங்களுக்கு பஞ்சமே இல்லை. அது போல ஒரு அதிசயம் தான் - அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள மஜூலி என்ற உலகின் மிகப்பெரிய நதி தீவு. சுற்றிலும் பசுமை, எங்கு பார்த்தாலும் பறவைகள், பழங்குடியின மக்களின் குடில்கள், மிரளவைக்கும் உபசரிப்பு என இந்த தீவு நம்மை அதம் பல்வேறு அம்சங்களால் கட்டிப் போடுகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் இடம் பெறுவதற்கான அனைத்து அமசங்களையும் உள்ளடக்கிய இந்த தீவை நாம் அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் பார்த்திருக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

அஸ்ஸாமில் அமைந்துள்ள அழகிய நன்னீர் தீவு
இந்த தீவு வடக்கே சுபன்சிரி நதி மற்றும் தெற்கில் பிரம்மபுத்திரா நதியால் உருவாகிறது. இது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து அசாமின் கலாச்சார தலைநகரமாக அறியப்படுகிறது. பசுமையான சுற்றுச்சூழலுக்கு நடுவில் ஒரு அலாதியான அனுபவத்தை நாம் இங்கு பெறுவது கட்டாயம் என்றே சொல்லலாம். ஜோர்ஹாட் நகரத்திலிருந்து வெறும் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் பாழடையாமல் பாதுகாக்கப்படுகிறது. இணையற்ற அழகும் மற்றும் வளமான கலாச்சாரத்துடனும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தீவான மஜூலி உங்களை முதல் பார்வையிலேயே ஆச்சரியப்படுத்தும்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகள்
கவுகாத்தியிலிருந்து 347 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு பசுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த, தூய்மையான மற்றும் மாசு இல்லாத ஒரு நன்னீர் தீவாகும். பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள இந்த தீவு 352 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கரமூர் மற்றும் கமலாபாரி என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ள இந்த தீவு முழுவதும் பல சிறிய கிராமங்கள் உள்ளன. இது மேலும் இது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

எதனால் மக்கள் இங்கு அதிகம் வருகிறார்கள்
நவீன உலகின் சலசலப்பில் இருந்து வெகு தொலைவில், அசாமில் உள்ள இந்த பிரபலமான சுற்றுலாத் தலம் அமைதியின் சோலையாக உள்ளது. இந்த தீவு ஒரு தொன்மையான உலகமாகும், அங்கு மக்கள் மூங்கில் குடிசைகளில் வசிப்பதைக் காணலாம், கையால் பொருட்களைச் செய்து, நெருப்பில் சமைப்பதைக் காணலாம். நீங்கள் ஏராளமான இயற்கை அழகு, பல்வேறு வனவிலங்குகள் மற்றும் எங்கும் காண முடியாத அமைதி ஆகியவற்றைக் காணலாம். அஸ்ஸாமில் உள்ள இந்த சுற்றுலா தலத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் மிகவும் அன்பானவர்கள் அவர்களின் விருந்தோம்பளலில் நீங்கள் மெய் சிலிர்த்து போவது உறுதி.
பல அரிய பறவைகளின் புகலிடம் இந்த மஜுலி
பழங்குடியின மக்களின் வண்ணமயமான ஆடைகள் மற்றும் ஆக்கப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட முகமூடிகளை அவர்கள் அணிந்திருப்பது எல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. தைக் காணலாம். இது ஒரு காலத்தில் நவ-வைணவ கலாச்சாரத்தின் முதன்மை மையமாக இருந்தது. அசாமிய துறவி - ஸ்ரீமந்த சங்கர்தேவாவால் கட்டப்பட்ட பல மடங்கள் இன்னும் அங்கு அசாமின் துடிப்பான கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன. மஜூலி தீவு பறவைகளுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. நாரைகள், கிங்ஃபிஷர், ஈக்ரெட், பர்பிள் மூர்ஹென் மற்றும் வெள்ளை மார்பக நீர்கோழிகளை உள்ளடக்கிய இந்த இடத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளை காணலாம்.

கலை மற்றும் கலாச்சார தலைநகரமாக விளங்கும் மஜுலி
மஜூலி தீவில் உள்ள கம்லபரி சத்ரா கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின் முக்கிய மையமாக அறியப்படுகிறது. மஜூலி தீவில் உள்ள இந்த புகழ்பெற்ற சுற்றுலா தலத்தின் சுவர்கள் மற்றும் கூரைகள் நுட்பமான வடிவமைப்புகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மஜூலி தீவில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலாத் தலமான தக்கின்பட் சத்ரா ஓவியங்களையும் சிற்பங்களையும் கட்டாயம் பார்க்க வேண்டும். அசாமிய கலைப்பொருட்கள், நகைகள் மற்றும் பாத்திரங்களின் வளமான சேகரிப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவுனியாட்டி சத்ராவிற்கு வருகை தாருங்கள். செழுமையான பசுமையால் சூழப்பட்டுள்ள அஹோம், கட்டிடக்கலையின் மிகச்சிறந்த சுருக்கமாக இருக்கும் தெங்கபானியாவையும் மறக்காமல் பார்க்க வேண்டும்.

பழங்குடியின மக்களிடம் பழக ஒரு அரிய வாய்ப்பு
மஜூலி தீவு முழுவதும் விவசாயம் மற்றும் பழங்குடியின சமூகங்கள் வாழ்கின்றன. மஜூலி தீவின் அழகிய கலாச்சாரம் மற்றும் மரபுகளை நீங்கள் ஆராயும் கிராமத்தில் சுற்றுலா செல்லலாம். சாலையோரத்தில், கிராமவாசிகள் கைத்தறியில் பழங்கால கைவினைப் பயிற்சி செய்வதை நீங்கள் பார்க்கலாம். இந்த தீவில் மொத்தம் 22 சத்திரங்கள் உள்ளன, அவை அசாமிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அழகாக சித்தரிக்கின்றன. அங்கு நாடகங்கள், பிரார்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.

எப்படி செல்வது
பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் மஜூலியின் கலாச்சாரம் தனித்துவமானது மற்றும் மிகவும் சுவாரஸ்யமானது, இதுவே மக்கள் இந்த இடத்தை மிகவும் விரும்புவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நீங்களும் இங்கு சென்று இதன் இயற்கை அழகிலும், கலாச்சாரத்திலும் திளைத்திடுங்கள். நீங்கள் எங்கு இருந்தாலும் விமானம் அல்லது ரயில் மூலம் அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகரை அடைய வேண்டும். அங்கிருந்து சாலை வழியாகவும் படகு வழியாகவும் மஜுலியயை அடையலாம். படகில் பயணம் செய்வது தான் மஜுலியின் அழகை ரசிக்க ஒரு சரியான வாய்ப்பாகும்.



Click it and Unblock the Notifications




