அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பக்கே புலிகள் சரணாலயம் விளங்குகிறது. கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள இந்த இடம் 862 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
கெல்லாங் வன பகுதியை சேர்ந்து இருந்த இந்த இடம், 1877-ஆம் ஆண்டு வேட்டை சரணாலயமாக விளங்கியது. பின்னர் 2002-ஆம் ஆண்டு இது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வனவிலங்குகளை காப்பாற்றவும் பாதுகாக்கவும் காட்டிலாகா அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் உருவானதே இந்த புலிகள் காப்பகம்.
புலிகளை தவிர பல்வேறு வகையான விலங்குகளும் இங்கு உள்ளன. காட்டு பூனைகள், நரிகள், காட்டெருமைகள், பறக்கும் அணில்கள், சிறுத்தைகள், சிறுத்தை வகை பூனைகள், காட்டு நாய்கள், மான்கள், யானைகள், ஆதிகாலத்து குரங்குகள், பார்கிங் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் சில உதாரணங்கள்.
பக்கே புல சரணாலயம் அங்குள்ள இருவாய்க்குருவிகளுக்காகவும் பெயர் பெற்றது. இதனால் பறவையியல் வல்லுனர்களுக்கும் பறவை விரும்பிகளுக்கும் இந்த இடம் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
காட்டுக்கோழிகள், புறாக்கள், காட்டுவான்கோழிகள், வாத்துக்கள், கழுகள், கரிச்சான்கள், தொடுமுளைகள், மயில்கள் மற்றும் வெண்ணிற இறக்கைகளை கொண்ட மர வாத்துக்கள் போன்ற பறவைகளையும் பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம்.
இது போக மலை பாம்பு, கட்டு விரியான் மற்றும் நாக பாம்பு போன்ற சில வகையான ஊர்வனவையும் இங்கே காண நேரிடலாம்.
பூங்காவை சுற்றிப் பார்க்க சிறந்த பருவம்
இங்குள்ள மாசுப்படாத காற்று சுத்தமான இயற்கை நறுமணத்தை வீசச் செய்யும். இருப்பினும் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு வருவதே சிறந்த காலமாக கருதப்படுகிறது.
இந்த சரணாலயத்திற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் தேஸ்பூரில் உள்ளது. பக்கே புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் ரங்பராவில் உள்ளது.
அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளதால் இந்தியாவில் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இங்கு சுலபமாக வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications