பாஞ்ச்கணியில் பிரசித்தி பெற்ற அம்சம் இந்த ஷேர்பாக் ஆகும். ரம்யமான பள்ளத்தாக்கினை பின்னணியாக கொண்டு எழிலுடன் விளங்குகிறது இந்த பூங்காப்பகுதி. இங்கு பலவிதமான குழந்தைகள் பூங்காக்களும், ரோஜாத்தோட்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
சிலை வடித்தல், களி மண் கலை பொருட்கள் செய்தல் போன்ற கலைநயமுள்ள பணிகள் இங்கு நடைபெறுகின்றன. முயல்கள் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஓடுவதையும், அன்னப்பறவைகள் குளத்தில் அமைதியாக நீந்துவதையும் பார்த்துக்கொண்டே ஒரு மாலை நேரத்தை மிக இனிமையாக இங்கு கழிக்கலாம்.