பஞ்ச்குலாவின் முக்கியமான மத தளங்களுள் நாடா சாஹிப் ஒன்றாகும். நகரத்தில் இருந்து 15கிமீ தொலைவில் காக்கர் நதியின் கரையில், சிவாலிக் மலை அடிவாரத்தில் உள்ளது நாடா சாஹிப் குருத்வாரா. சீக்கியர்களுக்கு முக்கியமான இவ்விடத்தில் குரு கோவிந்த் சிங் அவர்களின் படை வீரர்கள் பாக்னானி போருக்குப் பின் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது.
நாடு ஷா என்ற குரு கோவிந்த் சிங்கின் சிஷ்யர் போரில் வென்று வந்த வீரர்களை இங்கு வைத்து வரவேற்று குருவின் ஆசிகளையும் பெற்றார். அதனால் இக்குருத்வார அவரது பெயரையே பெற்றது.
எண்ணிலடங்காத சீக்கியர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இங்கு வருகை தருகிறார்கள். வட இந்திய மக்கள் நிறைய பேர் இங்கு இவ்விழாவில் பங்கேற்க வருகிறார்கள்.
மோதா சிங் என்பரால் கட்டப்பட்ட மஞ்சி சாஹிப் இப்போது இரண்டு அடுக்கு கூம்பு வடிவமாக மாற்றப்பட்டுவிட்டது. அதற்கு அருகிலேயே சந்திப்பு அறையும் அமைந்திருக்கிறது. குரு கா லகார் என்றழைக்கப்படும் தங்குமிடம் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதான குருத்வாராவில் இருந்து இந்த தங்குமிடம் பிரித்து கட்டப்பட்டுள்ளது.
கோவிலுக்கு அருகிலேயே புனித கொடி ஒன்றும் பறக்கவிடப் பட்டுள்ளது. சமுதாய உணவுகள், மத கூட்டங்கள் ஆகியவை இங்கு தினமும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
விரைவில் மூன்று அடுக்குகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்றை வாகன நிறுத்தமாகவும், லங்கார் அறையாகவும் கட்டி உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீக்கிய வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் இங்கு ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.