பதான்கோட்டிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்தேஷ்வர் கோவில் பஞ்சாப்பில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் மார்பில் கற்களால் செய்யப்பட சிவலிங்கமும், செப்பினால் செய்யப்பட்ட யோனியையும் காணலாம்.
விஷ்ணு, பார்வதி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளும் இந்த கோவிலில் உள்ளன. பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது இங்குள்ள குகையில் தங்கியதாக நம்பப்படுகிறது. பின்னர் சிவனை வழிப்பட இந்த கோவிலை கட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது.
கோவிலின் பின்புலத்தில் மலைகளும், ராவி நதியும் ஓடுவதால் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இக்கோவிலை முகேஸ்ரன் மந்திர் என்றும் அழைக்கின்றனர். புகழ் பெற்ற முகேஸ்ரன் டா மேளா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பைசக்ஹி அன்று கொண்டாடப்படும்.
மேளா மற்றும் சிவராத்திரியின் போது பஞ்சாப் மாநில பக்தர்கள் போக ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்தும் கூட பக்தர்கள் வருவார்கள். இங்குள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ராவி நதியின் இடது கரை பஞ்சாப் மாநிலத்திற்கும், வலது கரை ஜம்மு & காஷ்மீருக்கு சொந்தமானதாகும்.