கோவா-மும்பை நெடுஞ்சாலையில் மாபுஸாவை கடந்த பின்பு, பனாஜியின் வாயிலிலேயே அமைந்திருக்கிறது பர்வோரிம் நகரம். இந்த நகரத்துக்கு வெகு அருகாமையிலேயே சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது.
அதேபோல் இந்த நகரிலிருந்து பனாஜி செல்லும் வழியில், மாண்டோவி நதியில் கரையில் ரெய்ஸ் மகோஸ் கோட்டை அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதுபோல் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் பர்வோரிம் நகருக்கு வெகு அருகமையில் இருப்பதால் பயணிகளின் கூடத்தை இந்த நகரத்தில் அதிகமாக பார்க்கலாம்.
பர்வோரிம் நகரம் சமீப காலங்களில் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதோடு இந்த நகரம் பனாஜி நகருக்கு வெகு அருகில் இருப்பதால் பனாஜியின் விரிவாக்கப்பட்ட துணை நகரமாகவே கருதப்படுகிறது.
பர்வோரிம் நகரில் உள்ள கேஜுவாரியோ மற்றும் பேஸ்ட்ரி ஷாப் என்ற இரு உணவகங்களும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். அதோடு இந்த நகரில் பயணிகள் வசதிக்கு ஏற்ப குறைந்த விலையில் தங்குமிடங்களும் கிடைக்கும்.