அல்காட் கார்டன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு திவ்ய ஞான சமாஜத்தின் தலைவராக விளங்கிய திரு அல்காட் என்ற குருவின் பெயர் இடப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீக சமாஜத்தின் வழக்கமான ஆன்மீகக்கூட்டங்களும் இந்த தோட்டப்பூங்காவிலேயே நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பிரபலமான பிக்னிக் ஸ்தலமாகவும் இது பெயர் பெற்றுள்ளது.
அன்னி பெசண்ட் அம்மையார் இந்த தோட்டப்பூங்கா வளாகத்திற்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளார். அதாவது திவ்ய ஞான சமாஜத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா ஆகிய இரண்டு நிகழ்வுகளின்போதும் அவர் இந்த தோட்டப்பூங்கா ஸ்தலத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த அல்காட் தோட்டப்பூங்கா வளாகத்தில் பல சிந்தனையாளர்கள் ஒன்று கூடி சமூகசீர்திருத்த நோக்கங்கள் குறித்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். பல உயரிய சித்தாந்தங்களும் கருத்துகளும் இந்த ஸ்தலத்தில் பிறந்துள்ளன.
இப்படி பல பெருமைகளை கொண்டுள்ள இந்த தோட்டப்பூங்கா வளாகமானது இன்னெஸ்பேட்டா எனும் இடத்திலிருந்து காட்டன்பேட்டா எனும் இடத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது.