காகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. புராணிகக்கதைகளின்படி, கௌதமரிஷியால் சபிக்கப்பட்ட இந்திரக்கடவுள் இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து தன் சாபத்திலிருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது.
ஒரு லட்சம் ஆறுகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வித்து பாபவிமோசனம் பெற்றதாக மேலும் ஐதீகக்கதைகள் கூறப்படுகின்றன.