ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட நூலக வளாகமானது வாசுராய கிரந்தாலயம் மற்றும் ரத்னகவி கிரந்தாலயம் என்ற இரண்டு பெரிய தனித்தனி நூலகங்களை உள்ளடக்கியுள்ளது.
வாசுதேவ சுப்பராயடு என்பவரால் வாசுராய கிரந்தாலயம் எனும் நூலகமும், கொக்கண்ட வெங்கட்ரத்னம் என்பவரால் ரத்னகவி கிரந்தாலயம் எனும் நூலகமும் கட்டப்பட்டுள்ளன. இவை இரண்டும் இணைந்த ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம் 1898ம் ஆண்டில் பெயரிடப்பட்டு 1920 ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நூலகங்களில் ஏராளமான புத்தகங்கள் மற்றும் பிரதிகளின் சேகரிப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. மலைப்பூட்டும் வகையில், 60000 எண்ணிக்கையிலான புத்தகங்கள் இந்த நூலகங்களின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன.
இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளை சேர்ந்த நூல்களும் இவற்றில் அடங்கும். வியாழக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறந்திருக்கும்.