கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு பிரசித்தமான நீராடுதுறையே (குளியல் படித்துறை) இந்த புஷ்கர் காட் எனப்படுகிறது. இந்த குளியல் படித்துறையை சுற்றி பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன.
இவற்றில் ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரா கோயில் மற்றும் மார்க்கண்டேயா கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ராஜமுந்திரியில் உள்ள பல குளியல் படித்துறைகளில் இந்த புஷ்கர் படித்துறையும் ஒன்றாகும்.
இந்த படித்துறையில் மூழ்கி குளிப்பவர்களின் பாவங்கள் கழுவப்படுவதாக ஐதீக நம்பிக்கை நிலவி வருகிறது. சுற்றிலும் நிறைய கோயில்களையும் கொண்டுள்ளதால் இந்த படித்துறை பக்தர்கள் மத்தியில் மிகப் பிரபல்யமான ஒன்றாக அறியப்படுகிறது.