ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம் 1967ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இங்கு பல அரிய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புராதன காலத்திய ராஜமுந்திரி நகரத்தின் கலாச்சார பெருமைகளுக்கு பறைசாற்றும் அரும்பொருட்கள் இந்த சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்கள், மட்பாண்டங்கள், கற்சிலைகள், ராஜ வம்ச நாணயங்கள் போன்றவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.
அரிதான பனை ஓலைச்சுவடிகளும் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சீமாந்திரா பூமியின் கலாச்சார தொன்மங்களை பாதுகாத்து காட்சிக்கு வைக்கும் பிரதான நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறக்கப்படுகிறது. மிகக்குறைவான நுழைவுக்கட்டணமும் இங்கு வசூலிக்கப்படுகிறது.