ராஞ்சியில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி புருலியா நெடுஞ்சாலையில் உள்ளது. 320அடி உயரத்தில் இருந்து விழும் சுபர்னலெகா நதியின் வீழ்ச்சி விழுகும் இடத்தில் தேங்கும் நுரை நிறைந்த நீரில் பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள்.
பலரும் விரும்பும் மலையேற்ற தளமாகவும் இது விளங்குகிறது. மழைக்காலத்தில் அடர்த்தியாக விழும் அருவி பயம்தருவதாக இருக்கிறது. கோடைகாலத்தில் சிறந்த சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. கெஜெட்டர் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதிய ஆங்கிலேயர் ஒருவர் இந்த இடத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.