ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் உள்ளே அமைந்துள்ள ஏரிகளில் இந்த மாலிக் தலாவ் ஏரியும் ஒன்று. இந்த ஏரிகள் காட்டுயிர் பூங்காவின் சூழலியல் சமநிலையை தக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
காட்டுப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான அத்தியாவசிய நீராதாரமாக இவை திகழ்கின்றன. உப்புக்கொத்தி, கொக்குகள், நாரைகள், தாழைக்கோழிகள், மீன்கொத்திகள், வல்லூறுகள், பருந்துகள் போன்ற பல பறவைகளை இந்த ஏரிப்பகுதியில் பார்க்கலாம். முதலைகள் கரைகளுக்கு வந்து ஓய்வெடுப்பதை பார்க்க முடிவதுடன் நீர் அருந்த வரும் புலியையும் எப்போதாவது காண வாய்ப்புண்டு.