ரிஷிகேஷில் இருந்து 15கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. ஷிவாலிக் மலைத் தொடரின் பதிமூன்று முக்கியக் கடவுள்களின் ஒன்றுக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சூரிய உதயத்தையும், மறைவையும் இக்கோவிலில் இருந்து கண்டு ரசிக்கலாம். மேலும் இக்கோவிலுக்கு வருகை தருபவர்கள் செளகாம்பா, ஸ்வர்க ரோஹினி, பந்தேர்பஞ்ச், கங்கோத்ரி ஆகிய கார்வால் இமயமலைகளின் நுனியைக் கண்டு ரசிக்கலாம்.
நாடோடிக் கதைகளின்படி தன் தந்தை தக்ஷாவினால் தன் கணவர் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டதை தாங்க முடியாமல் இந்துக் கடவுளான சதி தன் உயிரை தியாகம் செய்துவிட, துக்கத்தால் தவிக்கும் சிவன் தன் மனைவியின் உடலை கைசால மலைக்கு தூக்கிச் செல்லும் போது உடலின் மேற்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications