450 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தொங்கு பாலமான லக்ஷ்மணா பாலத்தில் இருந்து பார்த்தால் ரிஷிகேஷில் இருக்கும் கோவில்கள், ஆசிரமங்கள், நதிகளின் அழகை கண்டுகளிக்கலாம்.
ஆரம்பத்தில் சணல் பாலமாக இருந்ததை 1939ல் இரும்பு தொங்கு பாலமாக மாற்றி அமைத்தார்கள்....
ரிஷிகேஷின் முக்கிய அடையாளச் சின்னமாக கருதப்படும் ராம் ஜூலா பாலம், ரிஷிகேஷிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் முனி கி ரேத்தி என்ற இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பாலம் லக்ஷ்மண ஜூலாவிற்கு அருகில், அதே தோற்றத்தில் 1980ல் கட்டப்பட்டுள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி மலை என்றழைக்கிறார்கள். ரிஷிகேஷின் கோவில்களுக்கு செல்லும்முன் பக்தர்கள் இந்த சங்கமத்தில் குளித்துவிட்டுச் செல்கிறார்கள்.
இங்கு குளிப்பது அனைத்து பாவங்களில் இருந்து விமோசனம் அளிப்பதாக...
ரிஷிகேஷில் இருந்து ஏறத்தாழ 6கிமீ தொலைவில் இருக்கும் ராஜாஜி தேசியப் பூங்கா 820.42சதுர அடி நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. 1983ல் கட்டப்பட்ட இந்த பூங்காவில் மோடிசூர், சில்லா மற்றும் ராஜாஜி சரணாலயம் என மொத்தம் மூன்று சரணாலயங்கள் அமைந்துள்ளன. புகழ்பெற்ற சுதந்திரப்...
பங்கஜா மற்றும் மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள நீல்கந்த் மகாதேவ் கோவில் ரிஷிகேஷின் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 1330மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலில் இருந்து விஷ்ணுகூத், பிரம்மகூத் மற்றும் மணிகூத் ஆகிய குன்றுகளின்...
கங்கை கரையில் அமைந்திருக்கும் கீதா பவனின் சுவர்களில் ராமாயண, மகாபாரத புராணங்களை ஒட்டிய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் கங்கையில் புனித நீராட வரும் பக்தர்கள் 1000 அறைகள் இருக்கும் கீதா பவனில் தங்கிச் செல்கிறார்கள்.
கங்கையில் நீராடுவது...
கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் வஷிஷ்ட குஹா ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஏராளமான குலார் மரங்கள் என அழைக்கப்படும் ஃபிகஸ் மரங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இவ்விடம் தியானத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
இந்துக்களால் புனிதமானதாகக்...
லக்ஷ்மண ஜூலா பாலத்திற்கு அருகில் இருக்கும் இக்கோவில் ரிஷிகேஷின் புகழ்பெற்ற மத ஸ்தலங்களில் ஒன்றாகும். 13மாடி கொண்ட இக்கோவிலின் ஒவ்வொரு மாடியும் 13 வெவ்வேறு இந்துக் கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
ரிஷிகேஷில் இருந்து 15கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. ஷிவாலிக் மலைத் தொடரின் பதிமூன்று முக்கியக் கடவுள்களின் ஒன்றுக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சூரிய உதயத்தையும், மறைவையும் இக்கோவிலில் இருந்து கண்டு...
கடல் மட்டத்தில் இருந்து 380மீ உயரத்தில் இருக்கும் கெளடியாலா, ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். கங்கைக் கரையில் இருக்கும் கெளடியாலாவைச் சுற்றி அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.
ஏராளமான காட்டு விலங்குகளுக்கு...
13 மாடிகள் கொண்ட ஸ்வர்க நிவாஸ் கோவில் ஆரஞ்சு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கோவிலாகும். அமெரிக்காவில் ஹட்ட யோகாவை அறிமுகப்படுத்திய குரு கைலாஷ் ஆனந்த் அவர்களின் அமைப்பினால் இந்தக் கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த கோவிலின் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு...
ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி, இங்கிருக்கும் ஏராளமான சிவன் கோவில்களின் காரணமாக சிவபுரி என்ற பெயர் பெற்றது. கங்கை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த சிறிய கிராமம் ஆற்றுப் படகு சவாரிக்கு புகழ்பெற்றது.
சுற்றுலாப் பயணிகள்...
ரிஷிகேஷில் புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்குகளில் மலையேற்றமும் ஒன்றாகும். தாலிசைன்யில் இருந்து பெளரி வழியாகச் செல்லும் கார்வால் இமாலயத் தொடர் இங்கிருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதையாகும்.
புவானி நீர்குட்டில் இருக்கும் சிறிய மலையேற்றப் பாதையையும் வார...
ரிஷிகேஷ் செல்லும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் சாகச விளையாட்டாக வெள்ளை நீர் சவாரி விளங்குகிறது. கங்கை நதியில் வேகமான மற்றும் மிதமான நீர் வரத்துகளும் ஒருங்கே அமைந்திருப்பதால் அனுபவமுள்ளவர்களும், இல்லாதவர்களும் கூட இந்த விளையாட்டில் ஈடுபடலாம்.
இங்கேயே...
ரிஷிகேஷ் வரும் பயணிகள் இங்கிருக்கும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதை பெரிதும் விரும்புகிறார்கள். ருத்ராக்சங்கள், இந்துக் கடவுள்களின் சிறிய விக்கிரகங்கள், நடராஜர் சிலைகள், மதப் புத்தகங்கள் ஆகியவற்றை ரிஷிகேஷில் வாங்கலாம்.
மேலும் குளிர்கால உடைகள்,...