கங்கை கரையில் அமைந்திருக்கும் கீதா பவனின் சுவர்களில் ராமாயண, மகாபாரத புராணங்களை ஒட்டிய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் கங்கையில் புனித நீராட வரும் பக்தர்கள் 1000 அறைகள் இருக்கும் கீதா பவனில் தங்கிச் செல்கிறார்கள்.
கங்கையில் நீராடுவது மட்டுமல்லாமல் தியானத்தில் ஈடுபட்டு கீதாபவனில் நடக்கும் சந்நியாசிகளின் உபதேசங்களையும் கேட்கலாம். சைவ உணவுகள், இனிப்பு வகைகள் மற்றும் பிற உணவு வகைகள் இங்கு நியாயமான விலையில் விற்கப்படுகிறது.
விடுதியின் உள்ளேயே ஆயுர்வேத நிலையம், புத்தக் கடை. உடைகள் விற்கும் நிலையம் மற்றும் லக்ஷ்மி நாராயணன் கோவில் ஆகியவையும் அமையப் பெற்றிருக்கின்றன. ஆயுர்வேத நிலையத்தில் தரப்படும் மருந்துகள் பழங்கால சுவடிகளின் படி இமயமலை மூலிகைகளிலும், கங்கை நதி நீரிலும் செய்யப்படுகின்றன.