கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி மலை என்றழைக்கிறார்கள். ரிஷிகேஷின் கோவில்களுக்கு செல்லும்முன் பக்தர்கள் இந்த சங்கமத்தில் குளித்துவிட்டுச் செல்கிறார்கள்.
இங்கு குளிப்பது அனைத்து பாவங்களில் இருந்து விமோசனம் அளிப்பதாக நம்பப்படுகிறது. மாலை வேளைகளில் இங்கு நடக்கும் மகா ஆரத்தி நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.
பக்தர்கள் இலைகளால் செய்யப்பட்ட சிறிய படுகுகளில் எண்ணை, பூக்கள் ஆகியவற்றை நிரப்பி தீபமாக்கி மிதக்கவிட்டு வழிபடுகிறார்கள். இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக 'பிந்த ஷ்ரதா' சடங்கும் இங்கு அனுஷ்டிக்கப்படுகிறது.