450 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தொங்கு பாலமான லக்ஷ்மணா பாலத்தில் இருந்து பார்த்தால் ரிஷிகேஷில் இருக்கும் கோவில்கள், ஆசிரமங்கள், நதிகளின் அழகை கண்டுகளிக்கலாம்.
ஆரம்பத்தில் சணல் பாலமாக இருந்ததை 1939ல் இரும்பு தொங்கு பாலமாக மாற்றி அமைத்தார்கள். ராமனின் தம்பி லட்சுமணன் இந்த பாலத்தில் கங்கை நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது.
அப்போதிருந்து இப்பாலம் லக்ஷ்மண ஜூலா பாலம் என வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற சுவர்க்க ஆசிரமம் இந்த பாலத்தில் இருந்து 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 1980ல் லக்ஷ்மண ஜூலாவிற்கு அருகில், அதே தோற்றத்தில் கட்டப்பட்ட ராம் ஜூலா எனும் பாலம் பிரபலமான சுற்றுலாதளமாக அறியப்படுகிறது.