கிரிகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள 'கிரிகங்கா கோவிலானது' ரொஹ்ருவில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். புராணக்கதைகளின் படி, இந்திய இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய மகரிஷியான வேத வியாசர், 5500 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.
காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கோவில் குளிர் காலங்களில் பனி படர்ந்து காணப்படும் இடமாக உள்ளது. சாகசத்தை விரும்பும் பார்வையாளர்கள், இங்குள்ள அடர்த்தியான தியோதர் மரங்களினூடாக மலைகளுக்கு மேலே செல்லலாம்.



Click it and Unblock the Notifications