ஹரியானாவிலுள்ள எல்லா நகரங்களையும்போன்றே ரோஹ்தக் நகரத்திலும் கோவாக்கரண் அல்லது கௌக்கரன் என்று அழைக்கப்படும் புனித தீர்த்தக்குளம் ஒன்று அமைந்துள்ளது. நகர மையத்திலேயே அமைந்துள்ள இந்த குளக்கரை வளாகத்தில் பல்வேறு தெய்வங்களின் கோயில்களை பார்க்கலாம்.
சிவன், ஹனுமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய தெய்வங்களுக்காக இந்த கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான மக்கள் குளத்தில் நீராடியபின் இந்த கோயில்களுக்கு விஜயம் செய்து தெய்வங்களை வணங்குகின்றனர்.
இந்த தீர்த்தக்குளத்தின் மூன்று புறமும் படித்துறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமான திருவிழா நாட்கள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் இந்த தீர்த்தக்குளத்தில் நீராடும் வழக்கத்தை மக்கள் கொண்டுள்ளனர். யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு தர்மஸ்தாலா ஒன்றும் இந்த குளத்துக்கருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குளத்துக்கு அருகிலேயே பூங்கா ஒன்றும் அமைந்திருப்பதால் வார விடுமுறை நாட்களில் மாலை நேர பொழுதுபோக்கிற்காக மக்கள் இந்த இடத்தை நாடி வருகின்றனர்.