மெஹாவோ வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு அங்கமான, தெளிந்த நீல நிற நீரை உடையதான மெஹாவோ ஏரி, இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இயற்கை அழகினால் சூழப்பட்டுள்ள இந்த நிச்சலனமான ஏரி, குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்டது; ஆகையினால் இந்த ஏரியில் மீன்கள் வாழ்வதில்லை.
சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பல்வேறு வகை தாவர வளம் மற்றும் விலங்கின வளங்களைக் கொண்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமான வாத்துக்களைக் காணலாம்.
மேலும் படகு சவரி செய்வதற்கான வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. பறவை கண்காணிப்பாளர்கள் மிகவும் ரசிக்கக்கூடிய ஸ்தலமான இது, சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. வழி நெடுகிலும் அழகு கொஞ்சும் காட்சிகள் விரியும் இந்த ஸ்தலத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு சுகானுபவமாகும்.