ருக்மிணி நாடி, பிஸ்மா மன்னரின் மகளும், கிருஷ்ண பகவானின் மனைவியுமாகிய இளவரசி ருக்மிணி வாழ்ந்து வந்த அரண்மனையின் இடுபாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. இந்த மலைக் கோட்டை 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு ஏடி வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
முன்பு அரண்மனையாக இருந்த இந்த கோட்டை, ரோயிங்கிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இடுபாடுகளுக்கிடையே காணப்பட்டாலும், இக்கோட்டை அக்காலத்தில் இருந்த அழகிய கட்டுமானத்தைப் பற்றி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கும் சிறந்த புராதனச் சின்னமாகத் திகழ்கிறது.