மானார்வில்லி மேன்சன் இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தில், இந்தியாவின் சுதந்திரத்தைப்பற்றி வேவல் பிரபுவிடம் (Lord Wavell) விவாதிக்க 1945 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத் ஆகியோர் தங்கியிருந்தனர்.
மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த கட்டிடம், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரவை உறுப்பினரான ராஜ்குமாரி அம்ரித் கவுரின் சொத்தாக இருந்தது. தற்போது, இது ஒரு விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications